Monday, December 12, 2016

12.12.2016 : கார்த்திகைப் பண்டிகை. திருவண்ணாமலை தீபம்

12.12.2016 : கார்த்திகைப் பண்டிகை. திருவண்ணாமலை தீபம்
**************************************************************

இன்றுபெரிய கார்த்திகை. திருவண்ணாமலையிலே தீபத் திருவிழா.

ஒவ்வொரு கிருத்திகையிலும் அந்த நடமாடும் தெய்வத்தின்மேல், திருப்புகழ் மெட்டிலே ஒரு பாடல் பாடி, அவர் பாதத்திலே சமர்ப்பிப்பது, அவரருளாலே, இன்றும் தொடர்கிறது.

இன்றைய புயல் நாளிலே, சென்னையும் அதனைச் சுற்றிய இடங்களும் பெரும் சேதமுறாமல், பெரும் அழிவுகள் நிகழாமல் காக்கவேண்டுமெனப் ப்ரார்த்தனையோடு, பாடலை சமர்ப்பிக்கிறேன்.

*******************************************************************************

"பாதிமதி நதி" மெட்டு.

தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான



வேத முறைதிரு நாத னவனுரு
ஓத மகற்றிடு - சிவநேசா!

வாத மவைதனை வேத னையைமிக
ஓட அருள்திரு - சிவபாலா!

போக மதில்மன மூழ்கி அழுதிடு
சோக மயல்தனை - களைவோனே

வேக நடையுடன் நாடு முழுதிலும்
பாதம் பதிவிடு - குருநாதா!

நாம மொருமுறை ஓது மடியவர்
வாழ்வி லொளியருள் - பெரியோனே

காம னுயிர்தரு மாது உறைதிரு
காஞ்சி வளநகர் - உறைவோனே

நாளு முனைமற வாத நினைவொடு
நானு மவனியில் - உன்தாளே

பாடும் பணியதை நாளும் நடத்திட
தேடும் பதமதைத் - தருவாயே

ஓல மிகுந்திடு ஞால மிதை விட
சீலக் கனிமுகம் - தருவாயே

கால னெனைக்கொடு போகு நொடியெனை
வேக மணைத்தருள் - புரிவாயே!