Friday, March 1, 2019

Anusham : 26.2.2019

Anusham : 26.2.2019

அப்பா! நான் உன் குழந்தை இல்லையோ? குழந்தை அப்பா அம்மாவை விட்டுவிட்டு இங்கே அங்கே ஓடிக்கொண்டுதானே இருக்கும். தாய் தந்தையர் தானே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும்? 



சின்னஞ்சிறு குழந்தையது தாயவளை விட்டு புறம்
   ஓடுவதுபோல் நானும் ஓடிடுவேன்! முக்கண்ணா!
என்னுயிரே! ஆரமுதே! தாய்தந்தை ஆனவனே!
   மதலையிவன் பக்கம் நீ விட்டுவிட வேண்டா கேள்!
 
அறியாத பிள்ளையது விளையாட்டு பொம்மையதை
    கண்டவுடன் தாயவளை விட்டகன்று போவாற்போல்
சிறியேனும் வாழ்வினிலே சிறு இன்பம் தனைத்தேடி
     புறம்போகும் வேளையெனை விட்டுவிட வேண்டா கேள்!
 
நெருப்பதனை அழகான பொருளென்று தொட்டுவிட
      சிறு பிள்ளை நெருங்குவது போல் நானும் வாழ்வினிலே
அறுபகைவர் பின்னாலே அலைகின்றேன் எண்தோளாய்!
      எனைவிட்டு எங்கும் நீ போகாதே சொன்னேன் கேள்!
 
உனையென்றும் அகம்தன்னில் வைத்துந்தன் பாதமலர்
       அதைப்பற்றி வாழ்கின்ற அடியாரோ டிணங்காமல்
மனை, மக்கள் என வாழ்வில் புறம்போகும் சிறுவனெனைக்


         கைவிட்டு வேறெங்கும் போகாதே! சொன்னேன் கேள்!