Friday, July 31, 2015

உன்னை சரணடைந்தேன் என் ஐயா

ராகம் : புன்னாகவராளி

உன்னை சரணடைந்தேன் என் ஐயா
உன்னை சரணடைந்தேன்

அன்பே, அமுதே, அருளே, இறையே,
என்றும் உன்பதம் கிடைத்திடவே இன்று (உன்னை)

காமமும் மோகமும் கோபமும் க்ரோதமும்
பாவி என்னை மிகப் படுத்துவதால் இன்று (உன்னை)

காசும் பணமும் ஒன்றே குறியாய்
காலமெல்லாம் வீண் அடித்துவிட்டேன் - இன்று (உன்னை)

பிறந்ததிலிருந்து உன் ஸ்மரணை இல்லாமல்
வயதினை வீணே கழித்துவிட்டேன் - இன்று (உன்னை)

இறப்பெனக்கென்று வரும் என அறியேன்
இருந்திடும் காலம் உனக்கெனவே - இன்று (உன்னை)

தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும்

ராகம் : ஹமீர் கல்யாணி


தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும் - அந்த
தெய்வத்தின் குரல் கேட்க மனம் கனியும் - எங்கள் மனம் கனியும்

தெய்வத்தின் முகம் பார்க்க மனம் துடிக்கும் - அந்த
தெய்வம் நம் முகம் பார்க்க மனம் உருகும் -எங்கள்
மனம் உருகும்

தெய்வத்தின் தாள் பணிய உடல் சிலிர்க்கும் - அந்த
தெய்வத்தின் தாள் பணிய பிணி அகலும் - பிறவி
பிணி அகலும்

தெய்வத்தை நாம் நினைக்க பயம் அகலும் - அந்த
தெய்வம் நம்மை நினைக்க வளம் பெருகும் வாழ்வில் வளம் பெருகும்

திருவடி சரணம் என அடைந்தேன்

ராகம் : ஷண்முகப்ரியா

திருவடி சரணம் என அடைந்தேன் - உன்
திருவடி சரணம் என அடைந்தேன் - குருமுர்த்தே உன்
திருவடி சரணம் என அடைந்தேன் (திருவடி)

அபயம் என்றோர்க்கு அருளும் திருவடி
எமபயம் நீக்கி காக்கும் திருவடி (திருவடி)

தில்லை அம்பலத்தில் ஆடிய திருவடி
காலனைக் காலால் உதைதத திருவடி
பிட்டுக்கு மண் சுமந்து நடந்த திருவடி
நண்பனுக்காக தூது நடந்த திருவடி (திருவடி)

மூவுலகும் நின்று அளந்த திருவடி
அகலிகை சாபம் போக்கிய திருவடி
கானகம் முழுதும் கடந்த திருவடி
பாண்டவர்க்கு தூது நடந்த திருவடி (திருவடி)

பதின்மூன்று வயதில் பயணித்த திருவடி
மும்முறை பாரதம் வலம்வந்த திருவடி
நடந்தே எங்கும் சென்றிட்ட திருவடி
பக்தர்கள் வாட்டத்தை போக்கிடும் திருவடி (திருவடி)

Periyava : Ashtothara Sadha Namavali :: 101

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman
நாத பிந்து கலாதீத வைபவாய நமோ நமஹ:" (101)

"நாதம் பிந்து கலை இவைகளுக்கு அப்பாற்பட்ட வைபவமுடையவருக்கு நமஸ்காரம்" (101)


obeisance to Him whose prowess is beyond nada (=sound), bindu (=finite sound) and kala (=manifest sound) (101)

Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



நாதமே வடிவாய் வந்த நாதனைவேதம் தேடும்
நாத பிந்து கலாதீத போதனைசாமகானம்
ஓத வந்தருளும் ஞான சீலனைமலர்ப்
பாதனைசுநாதனைபணிந்தனம் போற்றி போற்றி (101)

Thursday, July 30, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 100

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்



The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"சஹஜானந்த சம்பூர்ண சாகராய நமோ நமஹ:" (100)

"தானாக எப்போதும் ஆனந்தத்தால் நிரம்பிய சமுத்ரம் போல் இருப்பவருக்கு நமஸ்காரம்" (100)

"Obeisance to Him who is like an ocean filled with innate Ananda" (100)


Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்




இன்பத்தின் பெருவெளியே! எப்போதும் நிறைந்தமுதம்
நின்றூரும் ஆனந்த சாகரமே! அற்புதமே!
அன்பெனும் பிடிக்குள் தானே அகப்படும் மலையே! இங்கே
வந்த என் கருணைக் கடலே! உன்பதம் போற்றி போற்றி (100)

Wednesday, July 29, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 99

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman


"ஸ்வபாவ மதுரோதார கம்பீர்யாய நமோ நமஹ:" (99)

"ஸ்வபாவமாகவே இனிமையானதும் கம்பீரமானதும் ஆழமானதுமான சமுத்ரம் போன்றவருக்கு நமஸ்காரம்" (99)

Obeisance to Him who is like a deep ocean of natural sweetness and hospitality (99)


Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்




வானத்து அமுதாயிங்கு பிறவியாம் பிணியைப் போக்கும்
ஆனந்தக் கடலாயிங்கு கவலையாம் தாபம் தீர்க்கும்
ஞானத்து விளக்காயிங்கு அஞ்ஞான இருளை நீக்கும்
மோனத்தவம் விட்டிங்கு ஏகினான் பதமே போற்றி (99)

Periyava : Ashtothara Sadha Namavali : 98

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"நிரந்தர மஹானந்த சம்பூர்ணாய நமோ நமஹ:" (98)

"நிரந்தர பரமானந்தம் படைத்த ஆழ்ந்த மனமுள்ளவருக்கு நமஸ்காரம்" (98)

Obeisance to Him whose whole being permeates with the eternal great Ananda (98)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



பரிபூரணானந்தம் பெருகுமொரு சுடர் வடிவம்
விரிஞானம் தவழ்கின்ற முகம் காண மனம் நிறையும்
அறியாமை அகலும் வினை முழுதாக அழியும் நிதம்
பரிவோடு கருணைபுரி முனிவந்தாள் போற்றி போற்றி (98)