Tuesday, September 20, 2016

21.09.2016 : கிருத்திகை நாள் : நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்

21.09.2016 : கிருத்திகை நாள்

இன்று, கிருத்திகை.

கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது,  அவர் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.


இன்றைய பாடல் : "கைத்தல நிறைகனி" மெட்டில்.

"தத்தன தனதன தத்தன தனதன
 தத்தன தனதன  - தனதானா"

இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.
*******************************************

நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்
சித்தம துறைஎழில் - சிவரூபா!      

பக்தியொ டுனதடி பற்றிடு மெவரையும்
முக்திகொ டருளிடு - உமைபாலா!

பங்கயப் பதமலர் நொந்திட கடிதுவன்
தெங்களுக்கருளிடும்  -  குருனாதா!

எக்கண முனைநினை புத்தியொ டுனதடி
உற்றிடு நலமருள் யதிராஜா!


அற்பனென் உளமதை சற்குரு உறைதிரு
நற்பத மெனகதி தருவாயே!

கற்பக மெனவொரு அற்புத மதுசெயும்
பொற்பத மலரதை அருள்வாயே!

No comments:

Post a Comment