Friday, October 28, 2016

29.10.2016 : தீபாவளி நன்னாள்

29.10.2016 : தீபாவளி நன்னாள்

பெரியவா சரணம். அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்றைய நாளில், "ஜனனி நினுவினா" என்று சுப்பராய ஸாஸ்த்திரிகளின், ரீதிகௌளையில் அமைந்த பாடலின் வரிகள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

"ஈ ஜகமுலோ திக்கெவரம்மா" என்று மனமும் உயிரும் உருகிக் கரையும் அற்புதமான பாடல்.......

அந்த ஜகஜனனியேதானே இங்கே நமது பெரியவாளாய் வந்திருக்கிறாள்....

பெரியவாளின் பதம் பணிந்து, ரீதி கௌளையில் ஒரு பாடல்....

********************************************************************


ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….
இன்முகம் காட்டி எந்தன் (ஐயா)

பொன்மலர்ப் பாதம் நோக
உலகெல்லாம் நடந்தீரே
சின்னஞ்சிறுவன் இவன்
குரலை கேட்டிங்கு
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

உமையே நினைத்திருந்தேன்
உயிரும் தரித்திருந்தேன்
இமையும் மூடாது விழியில் ஆறோட
வினையின் வேர்மூலம் விலக்கும் பதம் சேர
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

Tuesday, October 18, 2016

18.10.2016 : கிருத்திகை : பத்தர்க்கென நச்சை அமுதென

18.10.2016 : இன்று, கிருத்திகை.


இந்த கிருத்திகை நாட்கள் தோறும், கையில் வேலில்லாமல், தண்டத்துடன் வந்து நம்மிடம் நடமாடிய ஸ்வாமிநாதனேயாகிய பெரியவாளின் மேல், திருப்புகழ் பாடலின் சந்தத்தில், ஒரு பாடலைப் பாடுவது என்று ஆவல்.


இன்றைய கிரித்திகையிலும் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொடுத்த பெரியவாளின் பதகமலங்களுக்கு இந்தப் பாடலை காணிக்கையாக்குகிறேன்.
************************************************************


"முத்தைத் திரு பத்தித் திருநகை" என்ற திருப்புகழ் சந்தத்திலே இந்த்ப் பாடலை அமைந்திருக்கிறது....


******************************************************************************


பத்தர்க்கென நச்சை அமுதென
இச்சையொடு முற்றும் பருகிய
உள்ளம்கவர் கள்வன் அவனது - வடிவான


அத்தன்பெரு வித்தன் மனதினில்
நித்தம்உறை சித்தன் கரமது
நித்தம்தரு பக்திக் கனியது - வரமாக


புத்தன்மத மித்யைச் சிதறிட
புத்தம்புது வித்தைக் கொடுதரு
சுத்தன்உரு சித்தன் அருளொடு - இனிதேகி


இக்கட்டுக ளைப்பற் பொடிதரு
திக்கட்ரவர் கட்குத் துணைவரு
ரக்ஷித்தருள் நின்பொற் பதமது - தருவாயே!