Friday, October 28, 2016

29.10.2016 : தீபாவளி நன்னாள்

29.10.2016 : தீபாவளி நன்னாள்

பெரியவா சரணம். அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்றைய நாளில், "ஜனனி நினுவினா" என்று சுப்பராய ஸாஸ்த்திரிகளின், ரீதிகௌளையில் அமைந்த பாடலின் வரிகள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

"ஈ ஜகமுலோ திக்கெவரம்மா" என்று மனமும் உயிரும் உருகிக் கரையும் அற்புதமான பாடல்.......

அந்த ஜகஜனனியேதானே இங்கே நமது பெரியவாளாய் வந்திருக்கிறாள்....

பெரியவாளின் பதம் பணிந்து, ரீதி கௌளையில் ஒரு பாடல்....

********************************************************************


ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….
இன்முகம் காட்டி எந்தன் (ஐயா)

பொன்மலர்ப் பாதம் நோக
உலகெல்லாம் நடந்தீரே
சின்னஞ்சிறுவன் இவன்
குரலை கேட்டிங்கு
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

உமையே நினைத்திருந்தேன்
உயிரும் தரித்திருந்தேன்
இமையும் மூடாது விழியில் ஆறோட
வினையின் வேர்மூலம் விலக்கும் பதம் சேர
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

No comments:

Post a Comment