Showing posts with label kruththikai. Show all posts
Showing posts with label kruththikai. Show all posts

Sunday, March 5, 2017

5.3.2017: நேற்று கிருத்திகை: இன்பமருள் சோதிமுகம் .. ... அதுதேடி

5.3.2017: நேற்று கிருத்திகை:
*********************************************
ஒவ்வொரு கிருத்திகைப் பொழுதையும் ஒட்டி, திருப்புகழ்ச் சந்த்த்திலே அந்த குருபரனேயான பெரியவா மேலே ஒரு பாடல் பாடுவது, அவர் அருளாலே இந்தக் கிருத்திகையிலும் தொடர்கிறது.


பெரியவா சரணம்.
தந்ததனத் தானதனத் ...... தனதான
தந்ததனத் தானதனத் ...... தனதான
......... பாடல் .........
("உம்பர்தருத் தேநுமணி" எனத் தொடங்குல் பாடலின் சந்தம்)
இன்பமருள் சோதிமுகம் .. ... அதுதேடி
கண்ணருளும் ஞானமுதச் .. .. சுவைநாடி
பக்தரவர் ஓடிவரும்.. .. திருநாளில்
வந்துஅவர்க் காகவருள் .. ..தருவாயே
சுத்தமறை ஓதுமுரைப் .. .. பொருளோனே
அன்பர்மனத் தாமரையில்.. .. அமர்வோனே
கெஞ்சுமிவன் வேதனையும்.. .. அறியாயோ?
கஞ்சமலர் பாதமதும்.. .. தருவாயோ?