Wednesday, August 24, 2016

24.08.2016 : கிருத்திகை நாள்: வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ

24.08.2016 : கிருத்திகை நாள்

இன்று, கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்த அறுமுகன் மேலே ஒரு ஆறு பதங்கள், பாமாலையாய்த் தொடுத்து சாற்றுவது வழக்கம்.

அந்தப் பாமாலைகள் 108 நிறைவடைந்து விட்டன.

என்றாலும், கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழில் ஒரு திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது,  சென்ற கிருத்திகையிலிருந்து தொடங்கி இருக்கிறது.

இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.

இன்றைய பாடல் : "நாத விந்து கலாதீ நமோ நமோ" மெட்டில்.

வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ


வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ
வேத ரூபனாய் நின்றாய் நமோ நமோ
வேதியர் தொழும் பாதா நமோ நமோ  - காஞ்சிவாழ்

காமகோடிப் ரஸாதா நமோ நமோ
நாமகோடிப் ரகாஸா நமோ நமோ
சேமகோடி பொற்பாதா நமோ நமோ - குருநாதா!

ஆதி சங்கரி பாலா நமோ நமோ
ஜோதி மங்கல ரூபா நமோ நமோ
பூதி கமலசெம் பாதா நமோ நமோ – வருவாயே!

யோகமந்த்ரஸ்வ ரூபா நமோ நமோ
ஆகமம் உரை தேவா நமோ நமோ

சோகம் தீர்க்கும்நற் பாதா நமோ – அருள்தாராய்!

பாடலின் இறுதிப் பதங்கள் "காஞ்சிவாழ் குருநாதா! வருவாயே! அருள்தாராய்" என்று அமைந்திருப்பதும் பெரியவா கருணையே. 

No comments:

Post a Comment