Saturday, January 7, 2017

08.01.2017 : கிருத்திகை நாள் : "பத கமல மீது சற்று"

08.01.2017 : கிருத்திகை நாள்





இன்று, கிருத்திகை. அது மட்டுமல்லாது, January - 8th - இன்று தான் - பெரியவா தனது பூத உடலை உகுத்த நாள்

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்த ஸ்வாமிநாதனின் பெயர் தாங்கி வந்த சிவரூபனாம் பெரியவாளின் மீது, அந்த ஸ்வாமிநாதனுக்கு உகந்த திருப்புகழின் ஓர் சந்தத்திலே, ஒரு பாடல் பாடும் திருப்பணி, இன்றும்  பெரியவாளின் அருளால், தொடர்கிறது.

இன்று, "சரண கமலா லயத்தை அரை நிமிஷ நேர மட்டில்.." என்ற திருப்புகழ் சந்தத்திலே , ஒரு பாமாலை.

பெரியவா சரணம்.


தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

பத கமல மீது சற்று மன மதனை நானும் வைத்து
     உனை தினமு மேது திக்க - அறியேனே

சத முனது தாளை உற்று கதி அடைய வேகம் கற்று
     உன தருளை நாட சித்த - மடைவேனோ

முக கமல ஜோதி கண்டு இத மிதென நாளும் வந்து
     கர மருளு மாசி கொண்டு - பெருவாழ்வு   

இக பரமு மாக நித்ய சுக மதுவு மேகொ டுத்து
     நித முனையு மேசு கிக்க - அருள்வாயே

மதி அதனை சூடு கொண்டை கரை யதுவு மான தொண்டை
     விதி யதனை சாடு மெந்தை - சிவரூபா

அதி வினைக ளேது மிங்கு சதி புரித லேத டுத்து
    கதி உனது பாத பத்மம் -  தருவாயே

மரு ளதனை யேய கற்றி, அரு ளதனை யேபு கட்டி
    திரு வடியை யேகொ டுத்து - பெரியோனே

சிறு வனிவ னாசை கண்டு,   உரு குமன மேபு குந்து,

    தரி சனமு மேவு கந்து  - தருவாயே

No comments:

Post a Comment