Sunday, February 5, 2017

5.2.2017 : கிருத்திகை: எக்கணமு மெய்த்தவநி னைப்பிலமர் வித்தகனை

5.2.2017 : கிருத்திகை:
************************************

ஒவ்வொரு கிருத்திகை தோறும், அந்த வடிவேலனேயான பெரியவாளின் மேலெ, அந்தக் கந்தன் புகழ் பாடும் திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் பாடுவது என்பது, இந்தக் க்ருத்திகையிலும், பெரியவாளின் அனுக்ரஹத்தில் நடந்திருக்கிறது.

பாடலைப் பெரியவாளின் சரணத்தில் அர்ப்பணிக்கிறேன்.

இன்றைய பாடல், "பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்" என்ற பாடலின் மெட்டின் அடிப்படையில், வருகிறது.

"தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான" என்ற சந்தம்.

********************************************************************

எக்கணமு மெய்த்தவநி னைப்பிலமர் வித்தகனை
நிர்மலனைப் பற்றிமிக விரைவாக (1)

பங்கயம லர்க்கரமு வந்தருளு கொற்றவனை
பித்தனவ நொத்தவனின் கழலேகி (2)

பக்தியொடு உந்தனிரு பங்கயம லற்கழலில்
என்புருக உள்ளமதும் நிலையேனோ? (3)

பற்றழிய சிட்சைதரு ரட்சகனில் பற்றிருகி
மற்றழிய உன்னினைவில் இறவேனோ? (4)

முந்தைவினை முற்றழிய பொற்கழலைப் பற்றிவரு
மந்தகனும் கட்டழியப் பெறுவேனோ? (5)

அன்புருவும் அன்னையென வந்துமனப் பந்தலதில்
தங்கிதரு மந்தசுகம் அடைவேனோ? (6)

எந்தையுனை சிந்தையினில் கொண்டுருகி இவ்வுலகில்
உந்தனிணை பத்மபதம் - உறுவேனோ? (7)

No comments:

Post a Comment