Wednesday, June 21, 2017

21.06.2017 : கிருத்திகை.

21.06.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் 

மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து 

சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

“வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே” என்ற பாடல்.

“தனதனன தாத்த ...... தனதான
     
தனதனன தாத்த ...... தனதான” என்ற சந்தம்.

பெரியவா சரணம்.





வயதுமிக போக்கி ..….உடலாலே
  துயரமிகு தேக்கி……..மனதாலே

உனதுபத மேத்தி……நினையாதே
   எனதுசிறு வாழ்வி…..லுழல்வேனே

குருபரனு மேத்து….மிறையோனே
    உலகமுழு தீந்த …..அரியோனே

அடியவனைக் காக்க வருவாயே

   சரணமெனக் கீந்து…..அருள்வாயே

No comments:

Post a Comment