Monday, August 14, 2017

கிருத்திகை : 15.08.2017 : மதியொடு மடந்தை சூடி

இன்று கிருத்திகை. கிருத்திகை தோறும், அந்த குருபரனேயான பெரியவாள் 

மேலே அந்தக் குருபரன் மேல் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் ஒரு

சந்தத்திலே ஒரு பாடல் புனைவது, இன்றும், அவர் அருளாலே 

நிகழ்ந்திருக்கிறது.


இன்றைய பாடல்,

“இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி

     னிருவினை யிடைந்து போக ...... மலமூட


என்னும் திருப்புகழின் சந்தத்திலே அமைந்திருக்கிறது. 


“தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான”             என்னும் சந்தம்.




பெரியவா சரணம். 


......... இன்றைய பாடல் .........



மதியொடு மடந்தை சூடி, விதியரி அயன்று போக

   தழலுரு விரித்த  தேவர்…..பெருமானே

கடலதைக் கடைந்த போது, பெருகிய விடத்தை வாரி

   அமுதென விழுங்கி  க்ஷேமம் அருள்வோனே

கதியென சிறந்த தூய பதமதை அடைந்த பாலன்

     நலமுடன் உவந்து வாழ……..அருள்தேவே

மலையினை எடுத்து கோப ரனைவரும்  வியக்க வான

     மழையினைத் தடுத்த வேதப் …..பொருளோனே

கொடுவினை தொடர்ந்து ஏக, மதியது மயங்கி மோக

   மயலிடை உழன்று வாட….…அதிமூட

இருளது கிடந்து பாடு படுமொரு சிதைந்த ஆவி

   அடுதுய ரடர்ந்து வீழ….விடலாமோ?

முகமல ரமிழ்தை வாரிப், பருகிட உயர்ந்த சீல

     அருகதை அளித்து சேவை ……தருவாயே

பதமல ரடைந்து ஞான ஒளியது விரிக்கு மோன


    சுகமதி லமிழ்ந்து வாழ…அருள்வாயே

No comments:

Post a Comment