Thursday, February 8, 2018

09.02.2018 : அனுஷ நாள் : இன்னொரு பிறவியென்னும் ஓர்வரம் கேட்டேன் அப்பா


09.02.2018 : அனுஷ நாள் : இன்னொரு பிறவியென்னும் ஓர்வரம் கேட்டேன் அப்பா

இன்று, அனுஷம். பெரியவாளின் பக்தர்கள் ஒன்றுகூடி அந்த தெய்வத்தை ஆராதிக்கும் திருநாள்.

இந்த நாளிலே, பெரியவாளை ஒரு வரம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. “அப்பனே, எனக்கு இன்னொரு பிறவி தருவாய் அப்பா” என்று கேட்கத் தோன்றியது.


பெரியவா சரணம். 



ரோஜாவாய்ப் பிறந்திருந்தால், அப்பனே! தேவர்க்கெல்லாம்
ராஜாவே! உன் கழுத்தில் மாலையாய் விழுந்திருப்பேன்!

மல்லியாய் மலர்ந்திருந்தால், ஐயனே! அடியார்க்கெல்லாம்
நல்லனே! உந்தன் தோளை, அலங்கரித்திருந்திருப்பேன்!

முல்லையாய் இருந்திருந்தால் பிறவியாம் பிணியை நீக்கும்
எல்லையாம் உந்தன் பாதம் அலங்கரித்திருந்திருப்பேன்!

சம்பங்கிப் பூவாய் நானும் பிறவியே எடுத்திருந்தால்
சம்புவின் பாதம் தீண்டும் ஓர் பூவாய் இருந்திருப்பேன்!

அரளியாய் நானுமிங்கே பிறவியே எடுத்திருந்தால்
அரனேயுன் தண்டம்தன்னை அலங்கரித்திருந்திருப்பேன்!

பவழமல்லிப் பூவாய் பிறந்திருந்தாலோ உந்தன்
நவ நவக் கோலம் கண்டுன் மேனியே சேர்ந்திருப்பேன்!

தாமரை மலராய் நானும் இருந்திட்டால் உந்தன் பாதத்
தாமரை மலரில் சாற்றும் ஓர் பூவாய் இருந்திருப்பேன்!

ஓர் பூவாய் நானுமிங்கோர் பிறவியோ எடுக்கவில்லை!
பார் காக்கும் ஐயனே உன் பாதமும் சேரவில்லை!

இந்த ஓர் அனுஷ நாளில், உன்னையோர் வரம் நான் கேட்டேன்!
இந்த ஓர் பிறவி நீங்கி, இன்னொரு பிறவி கேட்டேன்!

மனிதனாய்ப் பிறவி வேண்டேன்! செல்வமும் நிதியும் வேண்டேன்!
பனிசடைக் கடவுளே, என் அப்பனே! ஐயா! என்றும்,

உன்மேனி அலங்கரிக்கும் ஓர் பூவாய் உன்னைச் சேர,

இன்னொரு பிறவியென்னும் ஓர்வரம் கேட்டேன் அப்பா!

No comments:

Post a Comment