Tuesday, February 2, 2016

அனுஷ தசக ஸ்லோகம் 02.02.2016

02.02.2016 அனுஷ தினம்
*************************

நாளை, அனுஷம். 

பெரியவாளை ஸ்மரணை பண்ணும்போது, 'முதாகராத்த மோதகம்' என்று ஆதி சங்கரர் பிள்ளையார் மேலே செய்த ஸ்தோத்திர மெட்டிலே பாட வேண்டும் போலத் தோன்றியது. 

பாடலை, பெரியவா சரணங்களுக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். 





அனுஷ தசக ஸ்லோகம்
-------------------------------------------

நிலாவணிந்த நாயகன், கலாதரன், க்ருபாகரன், 
உலாவரும் கதிர் என, நடைநடந்த நாயகன் (1)

உயர்நலம் அருள்பவன், தயையதே நிறைந்தவன்
மயக்கிடும் இசையதாய், மிளிர்ந்திடும் மஹேஸ்வரன் (2)

புனல் மதி விடை சடை, சூலம் ஏதும் இன்றியே
அனல் என அழற்றும் துன்பம்  நீக்கிடும் தயாபரன் (3)

காவியே உடுத்தி வந்த கயிலை நாத சங்கரன்
மேவிடும் துயர் எலாம் களைந்து நிற்கும் தாயவன் (4)

சாம கான லோலன் நாக பூஷணன் திகம்பரன்
வாம பாகம் கௌரி இன்றி மண்ணில் வந்த சுந்தரன் (5)

நான்கு வேதம் வாழ வந்த நாதன் போதம் தீர்ப்பவன்
ஊன் உடம்பு கொண்டு நம்மை ஏய்த்து நின்ற மாயவன் (6)

குருஅருள் கனிந்து தெய்வக் குரலை அள்ளித் தந்தவன்
உறும் துயர் களைபதம் வழங்கி நிற்கும் தூயவன் (7)

காஞ்சித் தாயுமாகி வந்து காட்சி தந்து காப்பவன்
வாஞ்சையாக சேயர் எம்மை வீடும் கொண்டு சேர்ப்பவன் (8)

தண்டம் கொண்டு அண்டம் காக்கும் புண்டரீகப் பாவனன்
கண்டவர் பணிந்து  போற்றும் இன்ப ஜோதி சூரியன் (9)

காம மோக மாயையெல்லாம் நீக்கவந்த வேலவன்
நாமம் சொல்லக் காக்கும் சந்திர சேகரேந்த்ர மங்கலன் (10)

பலஸ்ருதி:
*************

நீ இனிக்க, பா இனிக்க, நெஞ்சினிக்க உன்னையே
நாவினிக்க பாடல் சொல்ல நன்மை யாவும் சேருமே

2 comments:

  1. Hara Hara Sankara Jaya Jaya Sankara; Kanchi Sankara Kamakoti Sankara. Gurubhyo Namaha

    ReplyDelete
  2. Hara Hara Sankara Jaya Jaya Sankara; Kanchi Sankara Kamakoti Sankara. Gurubhyo Namaha

    ReplyDelete