Saturday, February 20, 2016

பெரியவாளும் ஐயப்பனும் : 17.02.2016 சபரி மலை தரிசனம்:

17.02.2016 சபரி மலை தரிசனம்:

இன்று, சபரி மலையில் ஐயப்ப தரிசனம். குத்துக்காலிட்டமர்ந்து அருள்பாலிக்கும் இந்த தெய்வத்தின் அற்புத தரிசனம் கிடைக்கும்போதுதான் மனதில் கேள்வி: ஐயப்ப ஸ்வாமியைப் போல், குத்துக்காலிட்டமர்ந்து அருளும் தெய்வம் வேறு ஏது?


பெருமாளுக்கு நின்ற திருக்கோலமும், அமர்ந்த திருக்கோலமும்கூட உண்டு என்றாலும், கிடந்த திருக்கோலம் பிரசித்தம். சிவ பெருமானுக்கோ பலவிதமான திருக்கோலங்கள். முருகப் பெருமானுக்கு, நின்ற கோலம் அழகு. கணபதியோ அமர்ந்து அருளும் தெய்வம். பார்வதியும், சரஸ்வதியும், லஷ்மியும் அமர்ந்தும், நின்றும் அருள்செய்கிறார்கள்.

ஆனால், இப்படி, ஐயப்பன் போல், குத்துக்காலிட்டு அமர்ந்து அருள்பாலிப்பது வேறு யாரும் இல்லையோ? என்று மனதில் தோன்றியது.


சட்டென்று, இதோ இருக்கிறதே - என்று பட்டது. இந்த தெய்வத்தின் favorite sitting posture குத்துக்காலிட்டு அமருவது இல்லையோ?























பெரியவாள் என்னும் தெய்வம் இல்லையோ அந்த தெய்வம்? ஐயப்பனை தரிசனம் எய்யும்போது, அபிஷேகம் கண்டபோது, எங்கள் ஐயனும் இப்படித்தானே அமருவார் என்று மனதில் பட்டதை, அந்த சந்தோஷத்தை, ஒரு பாடலாய்ப் பதிவு செய்கிறேன்...

இருகால் குத்திட்டமர்ந்த நின் கோலம் கண்டு
உருகாத மனமுமிங்குளதோ என்னையனே
இருவிழியால் உன்னழகை அள்ளி அள்ளிநிதம்
பருகுமருள் தந்துன் பதமலர் அருள்வாய் அப்பா

இதனை, facebookல் பகிரும்போது, Facebook நண்பர் பெரியவாளையும் 
ஸ்வாமி ஐயப்பனையும் வைத்து ஒரு சிலேடை எழுதச் சொன்னார்...

அடியேனுக்கு சிலேடையெல்லாம் ஒன்றும் தெரியாது...தோன்றியதை 
அப்படியே இங்கே கொடுக்கிறேன்..

இருவரும், அரன்மகன். இருவரும் மாயையாம் புலிவென்று, அறுபகையாம் 
அரக்கியை அழித்தவர்கள். இருவரும், குத்துக்காலிட்டு அழகானதொரு 
அரும்பெரும் கோவில் அமர்ந்து, சரணம் என்று வருபவர்களுக்கு 
அருள்பவர்கள்...இருவரையுமே "ஐயன்" என்று சொல்வார்கள்...


அரன்மகனை, மாயைப் புலிவென்று அறுபகையாம்

அரக்கிதனையழித்து பெருங்கோவிலமர்ந்தானை- சரணமென
குத்துக்காலிட்டமர்ந்து அருள்வானை ஐயனென்பார்

வித்தகரும் அவனை உணர்ந்து

No comments:

Post a Comment