Saturday, April 30, 2016

25.04.2016 : Anusham Day

On 25th of April, on Anusham day, I had written a small poem in Tamil on Periyava. My dear Karthi anna (Bangalore) had asked me to pen down the gist or the translation of the same in English. I could pen it down only now…sharing the same here…

Thanks to Karthi Anna for making me think of Periyava again, in the garb of translating the Tamil poem into English…

****************************************************

25.04.2016 : Anusham Day

Thinking about Periyava doay on this Anusham day, there was this thought running in my mind…

People say that Periyava is “The very incarnation of Dharma; He is incarnation of Rama”. I also thought like that till today, However, when I think about it, I think it is wrong…

People say that “Periyava is like Lord Krishna; and like Him, Periyava also came and guided us”. They also say that “Like Krishna the JaadGuru, Periyava also is our JagadGuru”. I also thought like that till today. However, I now think this is also wrong…

People say that “Periyava is the Very Goddess Kamakshi who is in Kanchi”. I also agreed till yesterday. However, I think that is also wrong…

“That Lord Siva Himself had come down as ‘Periyava’, say people. However, I think even that is wrong…

“The Adhi Sankara Himself had come and sat at the Peeta once again to tell us all the Upadeshas in lovely Tamil so that even simpletons can understand it”, say people. I think even this is wrong….

Before all the devotees gather together to beat me up, let me explain the reasons…!!

Periyava Charanam.


1.Are you Raman? No…

Ram is dharma; dharma is Ram
One arrow, one word, one wife Rama’s Mantram

You came here again to establish Dharma
As reincarnation of Lard Rama

So did I think all these days
What a mistake in my ways!

2. Are you Krishna? No…

He came as JagadhGuru; gave us Gita
He resides in us; but confounds us by His Maya

He who stole the butter, steals our heart
In the war, rode Arjuna’s chariot

To teach us all that He had taught,
You have come, I just thought!

But I realized that this thought
Is fully wrong, all for nought

3. Are You Goddess Kamakshi? No…

Goddess Mother Kamakshi, sits in Kanchi, showering grace,
Takes care of all living beings, of all creed, color and race

Sports a sugarcane bow and arrow
Removes our suffering, pain and sorrow

Like that Goddess, I thought You are
The one who showers grace with no par

I thought You are the Goddess Mother
Now I know it is something else rather!

4.Are You God Siva? NO… 

Lord Siva is God of love, He Frees all
From the painful Maya; saves from Fall

He gave boons to Demons too
Showered His graces all thru thru

Doing good is what He does
You came too in His form thus

So I thought, now I know,
Want to share, all I know

5.Are You Adhi Sankara? No…

Sankara came once before
Taught us advaitha to fore

For those who couldn’t follow,
He taught, “keep the mind on Siva’s Glow”

You came as the head of Kanchi Peetam
You taught all that He taught with Freedom

I thought You are Sankara incarnate,
I thought wrong, will now elaborate!!

The Reasons….

What did Rama, Krishna, Mother Kamakshi, Siva and Adhi Sankara do?

Inspite of Ram standing in front, Tadaka did not change
Inspite of Ram standing in front, Asuras did not change

Ram was Dharma and Dharma came as Ram
Stood in front of Ravana once upon a time

Inspite of Ram standing in front, 
Ravana, just didn’t change, kept his hunt

The one who Stole Sita, Ravan, the Cheat,
Didn’t try to fall on Rama’s feet

Ram Killed him finally; Ravan Fell
But only the body fell, the heart didn’t swell

Gauravas didn’t respect Krishna’s advice
They didn’t change their ways of vice

Arjuna’s Chariot, Krishna ran
Arjuna still thought HE was just a man

Pandavas won the war by Krishna’s guiles
Still they lived later not with smiles

Goddess Kamakshi came in person, as the essence of grace
Still Bandasura stood in front; full of menace!

The mother of universe, who gives birth,
She destroyed Bandasura, became his death

Countless Asuras Prayed to Siva, obtained boons
But, their outlook didn’t change, they stayed as goons!

Ravana prayed to Siva, got blessing
He still fought Rama, the sweetest thing!

There was an Asura, who got a boon from Siva, Basmasur the Name
His trying to burn up Siva, is his claim to fame!

Adhi Sankara, who came as Siva’s incarnate
Won over rivals by His debates, deep and passionate!

While Adhi Sankara was grace itself, showered grace all around,
The one who wanted to cut His head, still stood his ground

When Adhi Sankara gave his head to be cut, to save Him there,
God had to come as Narasimha, killing the Kapalika there

What did our Periyava do?

Whose heart didn’t melt, having seen you in flesh?
Even those who came with no belief, changed, completely new and fresh!

Whose mind didn’t change, having heard your voice?
Whoever heard, understood that there is no other choice

Having surrendered to you as their Teacher, has anyone lost their ways?
The form full of grace and compassion, always making their days

Siva, Rama, Krishna, Goddess, Adhi Sankara all here
Did show their care by killing demons everywhere

But, no one was killed, who came in front of you
All those who came, got the wealth of heavens and more from you

Demons got the boons , having done great penance,
But, their hearts and mind still sought vengeance

But, when anyone says “Periyava”, the very word
Makes even  a burning heart to cool down, put down the sword

The boons from the Gods don’t seem to have caused any change of heart
Periyava! Changing hearts is what Your one look does, perfected as an art!

There are many miracles there in this universe
While these are many, none is better than changing even the perverse

None is a bigger miracle than melting the iron heart to pure gold
All the others pale in comparison, not worth to be told

Rama’s Dharma, Krishna’s words, oh so sweet,
Mother Kamakshi’s grace, Lord Siva’s boons, oh so neat

And Adhi Sankara’s penance and Glow
Altogether came in your form in one full flow

All the avatars could not effect the change of heart, and the war was on!
Periyava! You could do all that with no effort, which still goes on!

While Your body is not there, You are there as photo, sculpture and as dream
You are there everywhere, saving your devotees, as your life’s theme

You melt their hearts, and nothing else equals this
Who else is there? Which God is there - who gives this bliss?


Periyava Charanam

Wednesday, April 27, 2016

மலர் மாலைப் பாமாலை : 27.04.2016

மலர்களிலே ஒரு மலராய் நானும்தான் மலர்ந்திருந்தேன்
       மணம் வீ சி சுகம் பரப்பி நாளெல்லாம் மகிழ்ந்திருந்தேன்
மலராய் நான் மலர்ந்தென்ன? மணம்வீசி மகிழ்ந்தென்ன?
        மலர்மாலை அதில்சேர்ந்து உன் தோளில் விழவில்லை....


காடதனில் பொய்கையதில் தாமரையாய் மலர்ந்திருந்தேன்
         வண்டுலவ தென்றலது வீசிடவே மகிழ்ந்திருந்தேன்
காடதனில் பூவிதனைப் பறித்துடனே உன்பதத்தில்
          சேர்த்திடவே யாருமிலை, பூவிதுவும் வாடுதப்பா!

கோவிலிலே தோட்டத்தில் ஒருமலராய் நானிருந்தேன்
        ஸ்ரீசரண பதமலரில் சேர்ந்திடுவேன் எனநினைத்தேன்
பாவியென நீ நினைத்தால் ஆவியதும் விட்டிடுவேன்
         மேவியுனை அடைந்திடவே வரம் நீயும் தந்திடப்பா!


மல்லிகை ரோஜா முல்லை மனங்கவர் சம்பங்கியும்
அல்லியோடரளிப் பூவும், அருமையாய்த் தும்பைப்பூவும்
கொல்லெனப் பூத்த சாதி மல்லியோடிதயம் என்னும்
கல்லையும் உன்மேலிட்டேன் உளம்கனிந்தருள்வாயோ நீ?


தாமரை மலரைப்போல இருக்கும் உன் வதனம் பார்த்தும்
தாமரை இதழ்கள் போல இருக்கும் உன் பாதம் பார்த்தும்
மாமறை காக்க வந்த வடிவத்தை நிதமும் பார்த்தும்
காமம் கொண்டலையும் நெஞ்சைக் கனிந்துடன் ஏற்பாயோ நீ?


மனம் கவர் மலர்கள் சேர்த்து, மணம்கமழ் மாலை கோர்த்து
தினம் உனை அலங்காரித்து, குளிர்முகம் சிங்காரித்து
கனங்குழைக் கஞ்சித் தாயாம் உன்பாதம் அணைந்து நிற்கும்
இனம் என்றும் தருவாயப்பா! இசை வாழ்வு தருவாயப்பா!

Sunday, April 24, 2016

அனுஷம் : 25.04. 2016 : ராமனோ? கண்ணனோ? காமாக்ஷித் தாயோ? சம்புவோ? சங்கரரோ? நீர் இவர் யாரும் இல்லை!!

25.04.2016: அனுஷ தினம்:

பெரியவாளைப் பற்றி, இன்றைய அனுஷ தினத்திலே சிந்தனை செய்யும்போது, ஒன்று தோன்றியது.

பெரியவாளை, 'தருமத்தின் மூர்த்தி'; ராமனின் அவதாரமே பெரியவா என்று பக்தர்கள், அணுக்கத் தொண்டர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். அடியேனும் அப்படியேதான் இதுகாறும் நினைத்திருந்தேன். ஆனால், சற்றே யோசித்துப் பார்க்கும்போது, அப்படி நினைப்பது தவறென்று தோன்றுகிறது.

பெரியவாளை, "கண்ணன் கீதை சொன்னது போல், நமக்கெல்லாம் நல்வழி சொன்னவர்" என்றும், "ஜகத்குருவான அந்தக் கண்ணனைப் போலவே, நம் ஜகத்குருவான பெரியவாளும்" என்றும் சொல்வார்கள். அடியேனும் நேற்று வரை, அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இதுவும் தவறென்றுதான் தோன்றுகிறது.

"அந்தக் காஞ்சியில் உறையும் காமாக்ஷித் தாயேதான் பெரியவா, பெரியவா வேறு, காமாக்ஷித் தாய் வேறு என்று இல்லை" என்று சொல்வார்கள்.  அடியேனும் நேற்று வரை, அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இதுவும் தவறென்றுதான் தோன்றுகிறது.

அந்த சம்புவே கீழிறங்கி, இந்தப் "பெரியவா" அவதாரம் செய்திருக்கிறார் என்பார்கள். இதுகூட சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது.

"அந்த சங்கரரே மறுபடி இந்தப் பீடத்தில் வந்து அமர்ந்து தான் சொன்ன அனைத்து உபதேசங்களையும், அழகுத் தமிழிலே, மிக எளியவர்களும் புரிந்துகொள்ளுமாறு சொல்வதர்க்காக வந்திருக்கிறார்" என்று சொல்வார்கள். இதுகூட சரியில்லையோ என்று இப்போது தோன்றுகிறது.

பக்தர்கள் அனைவரும் கூடி இந்த அனுஷ தினத்திலே அடியேனை அடிக்கப் புகுமுன், காரணத்தையும் சொல்லி விடுகிறேன்!!

பெரியவா சரணம்.


1. ராமனோ நீர்? இல்லை!!

தருமத்தின் மூர்த்தி என்பார்; ராமனே தருமம் என்பார்
ஓரம்பு, ஓர் சொல் என்பார்; மனையாளும் ஒன்றே என்பார்

தருமத்தை நாட்டவென்று நீர் மீண்டும் பிறந்தீரென்றும்,
தருமத்தின் மூர்த்தி ராமன் உருவமாய் வந்தீர் என்றும்

பெருமையாய் நினைத்திருந்தேன்; இதுகாறும் எண்ணி நின்றேன்
உருவகம் செய்ததெல்லாம், தவறென்று புரிந்து கொண்டேன்!!


2. கண்ணனோ நீர்? இல்லை!!

ஜகத்குருவாக வந்தான்; கீதையே சொல்லி நின்றான்
அகப்பொருளாக நின்றான்; மாயமே செய்து நின்றான்

உளம்கவர் கள்வன் அவனும் வெண்ணையே திருடி நின்றான்
களம்துணை சென்று பார்த்தன் ரதமுமே ஓட்டிச் சென்றான்

மாயனாம் கண்ணன் சொன்ன உபதேசம் எல்லாம் மீண்டும்
சேயர்கள் எமக்குச் சொல்ல வந்தவர் நீரே என்று

அனத்துமே அறிந்த கண்ணன் அவன்போல் வந்தீர் நீரென்று
நினைத்தது எல்லாம் தவறே என்று நான் புரிந்து கொண்டேன்


3. காமக்ஷியோ நீர்? இல்லை!!

அன்னை காமாக்ஷித் தாயும் காஞ்சியில் வந்தமர்ந்தாள்
மன்னுயிர் எல்லாம் வாழ இன்னருள் தந்தமர்ந்தாள்

கரும்புவில் பஞ்ச பாணம் கொண்டிங்குயிர்கட்கெல்லாம்
விரும்புமனைத்தும்  தந்து தன்னையும் தரும்தாய் போல

பதமலர் பணிந்தோர்க்கெல்லாம் இதமுடன் இனிமை தந்து
நிதமருள் நிமல மூர்த்தி நீரென்று நினைத்தேன் ஐயா!

கதியருள் காமாக்ஷித் தாயாய் வந்தவர் நீரே என்னும்
இதுவுமே தவறு என்று இன்று நான் அறிந்தேன் ஐயா!


4. சிவனோ நீர்? இல்லை!

சிவனவன் அன்பின் தெய்வம்; மலரடி பணிந்தார் யார்க்கும்
பவமறுத்தாளும் தெய்வம்; நன்மையே செய்யும் தெய்வம்!

தவமதைச் செய்து பாதம் பணிந்த அவ்வசுரர்க்கெல்லாம்
நவநவ வரங்கள் தந்து அருள் பொழிந்துய்க்கும் தெய்வம்

நன்னலம் ஒன்றே தருமச் சம்புவின் வடிவாய் வந்து
இன்னலம் ஒன்றே தருமச் சிவனுமாய் நீரும் நின்றீர்

என்றிங்கு நினைத்தேன் நானும், தவறேனப் புரிந்து கொண்டேன்
இன்றிதன் உண்மையெல்லாம் நானுமே சொல்ல வந்தேன்!


5. சங்கரரோ நீர்? இல்லை!!

சம்கர மூர்த்தி வந்து நல்லுபதேசம் செய்து
அம்புவி வாழ என்று அத்வைதம் சொல்லி நின்றார்

அத்வைத தத்வம் எல்லாம் அறியாத மக்கள் தாமும்
சித்தத்தை சிவனில் வைக்கப் பக்தியும் சொல்லி நின்றார்!

சங்கரர் நிர்ணயித்த பீடத்தின் தலையாய் வந்தீர்!
சங்கரர் சொன்ன எல்லாம் நீருமே சொல்லி நின்றீர்!

சங்கர மூர்த்தி நீரே, இங்கென நினைத்திருந்தேன்!
இங்கதும் தவறே என்று இன்று நான் புரிந்து கொண்டேன்!


காரணம் சொன்னேன்......

ராமன், கண்ணன், காமாக்ஷித் தாய், சம்பு, சங்கரர் - எப்படி?

ராமனே எதிரில் வந்தும், தாடகை மாறவில்லை!
ராமனே எதிரில் நின்றும், அசுரர்கள் மாறவில்லை!

தருமத்தின் தலைவன் ராமன், தருமமே உருவாய் வந்தோன்
ஒருபத்துத் தலைக் கொண்டோனின் எதிரிலே நின்றானன்று

ராமனே எதிரில் நின்றும், தருமமே வடிவாய் வந்தும்,
காமமே கொண்டலைந்த ராவணன் மாறவில்லை!

பூவையைக் கவர்ந்தானங்கே தானுமே திருந்தியன்று
ஆவன செய்யும் ராமன் சேவடி பற்றவில்லை!

அம்பெடுத்தவனை மாய்த்தான் அண்ணலும் இறுதியாக!
வம்பெடுத்தலைந்த நெஞ்சம் வீழ்ந்தது, கனியவில்லை!

கீதையே சொன்ன கண்ணன் தூதையே மதித்து அன்று
பாதையை மாற்ற அந்த கௌரவர் முனையவில்லை!

சாரதியாக அந்தக் கண்ணனே வந்தும் கூட
தேரதில் நின்ற பார்த்தன் கண்ணனை உணரவில்லை!

போரதில் கண்ணன் செய்த ஜாலங்கள் அதனால் வென்றும்
பேரளவுக்கே பஞ்ச பாண்டவர் பின்னர் வாழ்ந்தார்!

காமாஷித் தாயே வந்தும், அன்பதன் வடிவே வந்தும்
ஏமாற்றி நின்ற பண்டாசுரன் மனம் மாறவில்லை!

சண்டமாருதமாய் மாறி, பண்டனை அழித்தாள் தாயும்!
அண்டமும் அதிர நின்றாள்! அன்புறு மாறி நின்றாள்!

சிவனவன் பதம் பணிந்து வரம் பெற்ற அசுரர் கோடி!
தவம் செய்து வரங்கள் வந்தும், அசுரர்கள் மாறவில்லை!

சம்புவைப் பணிந்து நின்றான்; தசமுகன் வரங்கள் பெற்றான்
அன்பதே வடிவாய் வந்த ராமனை எதிர்த்து நின்றான்!

வரம் தந்த சிவனைத் தலையில் கைவைத்து எரிக்கப் பார்த்தான்
சிரமது எரிந்து மாண்ட பஸ்மாசுரனும் ஓர்நாள்!

சம்புவின் வடிவாய் வந்த சௌம்யத்தின் மூர்த்தி கூட
நம்பறுந்திறலோடன்று வாதங்கள் புரிந்தே வென்றார்!

அன்புருவாக வந்தும், அருளையே பொழிந்து நின்றும்
தன் தலை கொய்ய வந்தான் அவன் மனம் மாறவில்லை!

சிரசதைத் தந்து நின்றார், அவரையே காக்க என்று
நரசிம்ம மூர்த்தி வந்தார்! கயவனைக் கொன்று நின்றார்!

எங்கள் பெரியவா எப்படி?

உம்மெதிர் வந்தாரவரில், உருகாமல் நின்றார் யாரே?
நம்பிக்கையின்றி வந்தோர், அவருமே மாறிப் போனார்!

உம்முடைக் குரலைக் கேட்டு, உளம் மாறாதிருந்தார் யாரே?
நிம்மதி அடைந்தார் தெய்வக் குரலையே உணர்ந்தார் அவரே!

கருணையின் உருவாம் உம்மை, அன்பதன் வடிவாம் உம்மை
குருவெனக் கொண்டார் யார்தான் அபஜயம் அடைந்தாரிங்கே?

சிவ ராமன், கண்ணன், தாயும், சங்கர மூர்த்தியாரும்
சுபமாக அசுரர் தம்மை அழித்தருள் புரிந்திருந்தார்!

ஆனாலும் உங்கள் முன்னால் வந்திங்கு அழிந்தவர் யார்?
வானாளும் செல்வம் அன்றோ வந்தவர் அடைந்திருப்பார்!

அருந்தவம் செய்து தேவர் பதமலர் பணிந்து தந்த
பெருவரம் எல்லாம் பெற்றும் கனியாத மனங்களுண்டு!

பெரியவா என்ற அந்த ஒருமந்திரத்தைச் சொல்ல
எரிந்திடும் மனமும்கூட குளிர்ந்திங்குக் குழைந்து போகும்!

தேவர்கள் வரங்களெல்லாம், மனமாற்றம் செய்ததில்லை!
தேவா, உன் பார்வை ஒன்றோ, மனமெல்லாம் உருகச் செய்யும்!

உலகத்தில் அற்புதங்கள் மிகப்பல உண்டு ஐயா!
பல உண்டு எனினும் இங்கே, இரும்பென இருக்கும் கல்லாய்

இருந்திடும் மனத்தைக் கனியாய் ஆக்கி நல் வழியில் மாற்றும்
அரும்செயல் ஒன்றுதானே பெரும் அற்புதமாய் நிற்கும்!!

ராமனின் தருமம் அதுவும், கண்ணனின் இனிமை மொழியும்
காமாக்ஷித் தாயாமவளின் கருணையும் சிவனார் அருளும்

சங்கர குருவாமந்த சம்புவின் தபஸும், வாக்கும்
இங்கொரு வடிவாய் வந்தீர்! எங்களின் துணையாய் வந்தீர்!

அத்தனை அவதாரங்கள் செய்திடா மனமாற்றத்தை
எத்தனை லகுவாய்ச் செய்தீர்! இன்னமும் நடத்துகின்றீர்!

உடலிங்கு இல்லாவிடினும், நிழற்படம், சிலை, கனவென்று
படர்ந்திந்த வையம் எல்லாம் பக்தரைக் காத்து நின்று,

அவர் மனமாயை மாற்றி,  அற்புதம் செய்யும் உம் போல்
எவரிங்கு உண்டு ஐயா? யாரை நான் சொல்வேன் ஐயா?

பெரியவா சரணம்.
பெரியவா சரணம்.


























Thursday, April 14, 2016

ராம நவமி : 15.04.2016

இன்று (15.04.2016), ராம நவமி. அந்தத் தாரக மந்த்ரனின் ஜன்ம தினம். 'ராம' என்னும் அந்த இரண்டு எழுத்தினால் என்னதான் நடக்காது?

கம்பன், அந்த நாமத்தின் பெருமையைப் பேசும்போது, இப்படிச் சொல்லுகிறான்: 

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் 
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே 
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை "ராம" என்னும் 
செம்மைசேர் நாமம்

நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம் 
வீடியல் வழியது ஆக்கும் வேரிஅம் கமலை நோக்கும் 
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை 
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே. 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே 
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே 
இன்மையே 'ராம' என்ற இரண்டு எழுத்தினால்



"காமகோடி - ராமகோடி" என்ற அற்புதமான புத்தகத்திலே ரா.கணபதி அண்ணா, ராமநாம மகிமையை, பகவன் நாம போதேந்த்ராள் காதை மூலமாக அற்புதமாக எடுத்துச் சொல்லுகிறார் : 


ஸ்ரீ போதேந்திரரைத் தென்திசைக்கு அனுப்பி நாமப் பிரசாரத்தில் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்டார் அவரது குருநாதர். காஞ்சிபுரம் செல்லும் வழியில் பூரியில் வசிக்கும் ஸ்ரீ லக்ஷ்மீதரர் என்னும் மகான் அருளிச் செய்த பகவன்நாம கௌமுதி என்னும் நாம சித்தாந்த கிரந்தத்தையும் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு, பூரி நோக்கி விரைந்தார் ஸ்ரீ போதர். பூரியில் ஸ்ரீ ஜகன்னாதரை சேவித்து, ஸ்ரீ லக்ஷ்மீதரரின் இல்லத்திற்கு சென்றார். ஆயின், அச்சமயம் லக்ஷ்மீதரர் இறைவனடி சேர்ந்திருந்தார். அவரது புதல்வரான ஸ்ரீ ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் குருநாதர் சொன்ன நாம சித்தாந்த கிரந்தத்தை பெறுவதற்காக இல்லத்திற்கு வெளியே காத்திருந்தார். உள்ளே சென்று அவர்களை தொந்தரவு செய்ய மனமின்றி, வாயிலில் அமர்ந்து நாம ஜபம் செய்யத் துவங்கினார்.

இதற்குச் சில நாட்கள் முன்னர், ஒரு இளம் தம்பதியர் தீர்த்த யாத்திரையாகக் காசிக்குச் சென்று கொண்டிருந்தனர். மாலைப் பொழுது என்பதால் இரவு அந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தனர். மறுநாள் காலையில், தீர்த்தயாத்திரை வந்தவரின் மனைவியைக் காணவில்லை. சுற்றும் முற்றும் நன்கு தேடினார், இருந்தும் பயனில்லை. ஊர் மக்களிடம் தெரிவித்தபோது, முகலாயர்கள் யாரேனும் உமது மனைவியை கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்றனர். இதைக் கேட்டு மனம் நொந்தார், ஆயினும் காசி யாத்திரையை நிறுத்த விரும்பாமல் காசி நோக்கிப் பயணித்தார். இறை அருளால் காசி யாத்திரை முடித்து அவ்வூர் வழியே வந்து கொண்டிருந்தார். மாலை வேளையில் தனது அநுஷ்டானங்களை ஆற்றுப் படுக்கையில் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரிடம் ஒரு இஸ்லாமியப் பெண்மணி வந்து நின்று 'ஓ' வென்று அழுதார். வந்திருப்பது தன் மனைவி என்பதை உணர்ந்தார், எங்குற்றாய்? என்ன நேர்ந்தது என்றார்? அதற்கெல்லாம் நேரம் இல்லை, முதலில் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்றார் அந்தப் பெண். உடனே இருவருமாக ஊரை விட்டு வெகு தூரம் வந்தனர். பாதுகாப்பான இடத்தை அடைந்ததும், சிலர் தன்னைக் கடத்திச் சென்றது பற்றியும், அவருக்கு அங்கு நடந்த கொடுமைகள் பற்றியும் கண்ணீர் மல்க விவரித்தார். பின்னர், தன்னை மனைவியாக ஏற்காவிடினும், இல்லத்தில் இருந்து தொண்டு புரியும் பாக்யமாவது தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். கணவனும், சாஸ்த்ரங்கள் சம்மதித்தால் அவளை ஏற்பதாகவும் உறுதி பகன்றார். அவர்கள் இருவரும் இது பற்றி ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் கேட்க அவரது இல்லத்திற்கு விரைந்தனர். (அந்த இல்லத்து வாசலில் தான் நம்ம சுவாமிகளும் நாம ஜபம் பண்ணிட்டு இருக்கார்).

இல்லத்திற்கு வந்த இருவரும், கதவைத் தட்டி, ஜகந்நாதரிடம் நடந்தவற்றைக் கூறினர். தங்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினர்.இதைக் கேட்ட மாத்திரத்தில், நீங்கள் இருவரும் மூன்று முறை ஸ்ரீ ராம நாமத்தை நீங்கள் மனமாரச் சொன்ன பிறகு முன்பு போல் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதைக்கண்டு வியந்த ஸ்ரீ போதர், இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? என்று கேட்டார். தனது தந்தை எழுதிய பகவன் நாம கௌமுதியே இதற்கு ப்ரமாணம் என்றார் ஜகந்நாத பண்டிட். உடனே அந்த அற்புத நூலையும் ஸ்ரீ போதரிடம் குடுத்தார். ஸ்ரீ பெரியவாளும், அன்று இரவே அந்த நாம சித்தாந்த க்ரந்தம் முழுவதையும் படித்தார். காலையில் அந்த தம்பதிகள் இருவரையும் அழைத்து, ஆம்! சாஸ்தரங்கள் சொல்வது உண்மையே, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மக்கள் இதை ஏற்க மறுப்பார்கள். ஆகவே நீங்கள் இருவரும் என்னுடன் நதிக் கரைக்கு வாருங்கள் என்றார். நதியில், ராம நாமம் ஜபித்து மூழ்கி எழும்படி சொன்னார். மூழ்கி எழுந்ததும், இஸ்லாமிய ஆடை அணிந்து இஸ்லாமியர் கோலத்தில் இருந்த அந்தப் பெண் பழைய உருவமும் புனிதமும் பெற்று மலர் மாலை, குங்குமத்துடன் மீண்டு எழுந்தாள். புதுமணத் தம்பதியர் இருவரும் ஸ்ரீ சுவாமிகளை சேவித்து விடை பெற்றனர்.

ஜகன்னாதரின் அன்னையோ, தன் மகன் செய்தது சிறிதும் சரியில்லை என்று கூறினாள். ஸ்ரீ.ஸ்வாமிகள் வியப்புடன் 'ஏன்' என்று கேட்க, ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே, எதற்கு மூன்று முறை சொல்லச் சொன்னான் தன் மகன்; ராம நாமம் எப்படிச் சொன்னாலும் பயன் கொடுக்கும் - மனமாரச் சொன்னாலும் சரி; புரியாமல், மனமின்றிச் சொன்னாலும் சரி - அப்படி இருக்கத் தன் மகன் அவர்களை, 'மனமாரச் சொல்லுங்கள்' என்று சொல்லிவிட்டானே  என்றும் வருத்தப்பட்டார் அந்தத் தாய்!!

பகவன் நாம போதேந்த்ரரோ ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார்! ராம நாம மகிமையை முழுவதுமாக உணர்ந்தார்!


நமது பெரிய பெரியவாளும், ராம் சூரத்குமாரரை "போதேந்த்ராள் சமாதிக்கருகில் வசிக்கிறாயா" என்று கேட்க அழைத்து வரச் சொன்னதும் அடியாரெல்லாம் அறிந்த ஓர் அற்புதம்தான். 

இத்தகைய பெருமை பெற்ற ராம நாமத்தை இந்த ராம நவமியிலே ஸ்மரித்து ஆனந்தம் பெறுவோம். 

அந்த ராமபிரானின் திருவடியிலே இந்தப் பாடல்கள் சமர்ப்பணம்.  


சிவனனவன் உள்ளம் நின்ற அண்ணலைச் சிவனும் அன்று
துவளிடைக் கொடியாளுக்கு சொன்னவோர் நாமம்தன்னை
பவவினைக் கடலைத் தாண்ட உதவிடும் நாவாய்தன்னை
தவமுறை தியானம் வைக்க, வாழ்க்கையும் இனிக்கும் அம்மா!

ராமனை, அனுமன் நாளும் சொன்ன மந்திரத்தை, சீதை
காமனை, இலங்கை வேந்தன் கூற்றினை, கம்பன் கண்ட
நாமனை, என்றும் காக்கும் இரண்டெழுத்தைச் சொல்ல
தேமதுரம் பிறக்கும், நாமினிப் பிறவோம் அம்மா!