Thursday, April 27, 2017

28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!

28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!
***************************************************************************************************************

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்தக் குமரனுக்குப் பிடித்த அழகிய திருப்புகழின் ஒரு சந்தத்திலே, ஸ்வாமிநாதனாய் அவதாரம் செய்த நம் பெரியவாளைப் பாடும் சந்தோஷம், அவர் அருளாலே இன்றும் தொடர்கிறது. 

அபகார நிந்தைபட் ...... டுழலாதே ....     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே என்ற பாடலின் 

தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான     என்ற சந்தம்.  

பெரியவா சரணம். 



ஒருநாளு முன்பதம்….நினையாதே
     தவயோக மென்பதும் ….அறியாதே
உருகாத ழிந்திடும் …..மனதாலே
     உனைநான டைந்திடப் …..பெறுவேனோ?
அரனோடு சக்தியின்…….வடிவோனே!
     தவராஜ சங்கரப் …பெயரோனே!
அடியார வர்மனம்…உறைவோனே!
     திருஞான சுந்தரக் ….கிழவோனே!



No comments:

Post a Comment