Friday, August 13, 2021

உனைக் கண்டு உருகாத......சிவரஞ்சனி 13.08.2021

உனைக் கண்டு உருகாத......சிவரஞ்சனி 13.08.2021

பல்லவி: 

 உனைக்கண்டு உருகாத, நெகிழாத மனம் கொண்ட 

எனைப்பாராய் என் ஐயனே! 

 

அனுபல்லவி: 

கருணைக் கடல்வெள்ளம் பெருகும் உலகெங்கும்! 

பருகிக் களிக்காதென் மூட மட நெஞ்சம்! 

 

சரணம்: 

தருணம் ஈதென்றுன் சரண மலர்பற்றி

வருவார் அடியாரும்; வினையேன் விழையேனே! 

 

குருவின் மலர்ப்பாத பெருமை அறியாத, 

கருமை மனத்தேனென் சிறுமை பொறுத்தென்னைக் 

 

கொஞ்சம் பாராயோ? அருளும் தாராயோ? 

கொஞ்சும் தாயாய் நீ இங்கே வாராயோ?

No comments:

Post a Comment