Friday, August 13, 2021

வெண்மதிக் கொழுந்தொன்று சூடும் - 14.8.21

வெண்மதிக் கொழுந்தொன்று சூடும்

தண்புனல் சடைகொண்டு ஆடும்

கண்நுதல் இறைவந்து இந்த

மண்ணதில் நடை பயின்றானே!

 

கொன்றை அம்மலர் ஒன்று சூடும்

மன்றதில் சதிர் ஒன்று ஆடும்

என் இறை ஜகம் நன்கு வாழ

நன்னகர் காஞ்சி வந்தானே!

 

மிடறதில் கறைகொண்ட பெம்மான் 

சுடரெனப் பொலிகின்ற எம்மான்

தடமுலைத் தையலும் தானாய்

இடர் களைந்திருள் நீக்கினானே!

 

புரம் மூன்றெரித்திட்ட தேவன் 

சிரமொன்று கொய்ந்திட்ட நாதன்

வரம்போல மனிதனாய் மண்ணில்

அரனவன் இறங்கி வந்தானே!


 

 





 

 

 

 


No comments:

Post a Comment