Monday, December 21, 2015

புண்ணியம் என்ன செய்தேனோ? 21.12.2015 : வைகுண்ட ஏகாதசி

21.12.2015 : வைகுண்ட ஏகாதசி

காலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனம். வெங்கடேசப் பெருமாள்.  நல்ல தரிசனம். அகத்திற்கு வந்ததும், ஏனோ, "குழலூதி மனமெல்லாம்" பாட்டே ஞாபகம். அதனால்தானோ என்னவோ, காம்போதியிலேயே உருவகம் ஆகி, கண்ணன் பாட்டாய் அமைந்திருக்கிறது!!


காம்போதி:

புண்ணியம் என்ன செய்தேனோ? நானும்
கண்ணனைக் கண்ணால் காண (புண்ணியம்)

வெண்ணெய் உண்டதெல்லாம் போதாதென்று அன்று
மண்ணும் உண்டவனைக் கண்ணால் காண (புண்ணியம்)

விண்ணவர் அமுதை, நீல வண்ணனை,
பண்வளர் குழலூதும் மாயனைக் காண (புண்ணியம்)


No comments:

Post a Comment