Monday, March 7, 2016

07.03.2016 : சிவராத்ரி : சிவ சிவ சிவ எனச் சொல்வாய் : பந்துவராளி

07.03.2016 : சிவராத்ரி : சிவ சிவ சிவ எனச் சொல்வாய் : பந்துவராளி

இன்றைய சிவராத்ரிப் பொழுதினில், அந்த சிவபெருமானை நினைத்து, ஒரு பாடல்.

பந்துவராளி ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...

****************************************************************************

சிவ சிவ சிவ எனச் சொல்வாய், நெஞ்சே
சிவ சிவ சிவ எனச் சொல்வாய்,
பவபயம் போக்கிடவே - நீயே (சிவ சிவ சிவ)

அவலநிலை நீங்க, கவலைகள் தாமோட
தவம் நிறை, குணம் உறை, பவபய ஹரனை நீ (சிவ சிவ சிவ)

குவலயத்தோர் வளம் பெற்றிடவும் அவர்
உவந்திடும் வகை இங்கு உற்றிடவும்
நவநவக் கலைபலக் கற்றிடவும் இங்கு
கவசமாய் யமபயம் அற்றிடவும் நீ (சிவ சிவ சிவ)

No comments:

Post a Comment