Tuesday, March 22, 2016

பங்குனி உத்திரம் : 23.03.2016 : மீணாக்ஷி கல்யாணம்

பங்குனி உத்திரம் : 23.03.2016 : மீணாக்ஷி கல்யாணம்

இன்று, பங்குனி உத்திரம். மீனாக்ஷி அம்மை, சுந்தரேஸ்வரரை ஆனந்தமாகக் கல்யாணம் செய்து கொள்ளும் நாள். முருகன் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நாள். ராமன் சீதையை மணம் செய்து கொண்ட நாள். ஆண்டாள் ரங்கமன்னாரை அடைந்த நாள். தர்ம சாஸ்தாவான ஐயப்பன் பிறந்த நாள். மன்மதனை எரித்து, உயிர்ப்பித்த நாள். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை உதைத்த நாள்.
இத்தனை சிறப்பான இந்த நாளில், சென்னையில் இருந்த வரை, வருஷா வருஷம், கொட்டிவாக்கத்தில், திரு. திவாகர் - திருமதி காயத்ரி திவாகர் இல்லத்தில் (மறைந்த திருமதி மீரா சேஷாத்ரி அவர்களின் இல்லத்தில்) நடைபெறும் மீனாக்ஷி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வது வழக்கம். குடும்ப சகிதமாக அங்கே போய் ஆஜராகி, மீனாக்ஷியைப் பார்த்து, hello சொல்லிவிட்டு, காலை tiffin சாப்பிட்டுவிட்டு, கல்யாண வைபவங்கள் எல்லாம் பார்த்துவிட்டு, மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, மனசில்லாமல் கிளம்பி வீடு போவது என்பது அனேகமாக கடந்த 20 வருஷங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
போன வருஷம் கூட, Bangalore லிருந்து drive பண்ணிக்கொண்டு போனோம். இந்த வருஷம், இங்கிருந்தே, மனக்கண்ணால் பார்க்க வேண்டிய நிலைமை. போன வருஷம், கல்யாணத்தன்று, பாடிய பாடலை அசை போட்டு, அன்னை பாதம் பணிகின்றேன்.
Photos : From Meenakshi Kalyana vaibavam at Sri.Diwakar's home at Kottivakkam - different days - different alankaram...
*************************************************
மீனாக்ஷி கல்யாணம் : ஆனந்த பைரவி
*********************************************************
கல்யாணம் காண வாருங்கோ! மீனாக்ஷியின்
கல்யாணம் காண வாருங்கோ! பர்வத புத்ரியின்
கல்யாணம் காண வாருங்கோ!
சுந்தரேஸ்வரருடன் ஆனந்தமாகவே
துந்துபி நாரதரும் மங்கலம் இசைக்கவே
ப்ரம்மனும் அக்னி முன்னே வேதமே ஓதி நிற்க
மாதொரு பாகன் இங்கே மாதுடன் நின்றிருக்க
ஆயிரம் பெயருடையோன் தாரைவார்த்துக் கொடுக்க
வேயுருதோளி பங்கன் கைத்தலம் பற்றி நிற்க
சந்திர சூரியர்கள் புத்தொளி வீசி நிற்க
இந்திராதி தேவர்கள் இன்னிசை பாடி நிற்க
கந்தனும் கணபதியும் கைத்தாளம் போட்டு நிற்க
வந்தவர் எல்லாருமே வந்தனம் செய்து நிற்க
பங்குனி உத்தரத்தில் இன்று நமக்காகவே
பொங்கு கருணையினால் என்றும் அருள் செய்யவே













No comments:

Post a Comment