Thursday, January 14, 2016

பொங்கல் பெரியவா ப்ரார்த்தனைப் பாமாலை : 15.01.2016


இந்தப் பொங்கல் நாளிலே, என் ஐயா, பெரியவாளே, உன்னடி பணிந்து ஒரு வேண்டுதல். பொன்னடி பணிந்து ஒரு ப்ரார்த்தனை.

பொங்கிடும் பொங்கலில் உன்னருள் பொங்கட்டும்!
மங்கலம் எங்கிலும் தங்கிடப் பொங்கட்டும்

துங்கக் கரிமுகத் தூமணி வாழ்த்தட்டும்!
எங்களின் தங்கமால் மருகனும் வாழ்த்தட்டும்!

கங்கையைத் தாங்கிய ஈசனும் அருளட்டும்!
பங்குடை மங்கையும் குங்குமம் அருளட்டும்!

சங்கொடு சக்கரம் கொண்டவன் காக்கட்டும்!
மங்கையாம் திருவும் மலர்ந்தே காக்கட்டும்!

சங்கரன் உன்னடிப் பங்கயம் காக்கட்டும்!
மங்கா வளம்தந்து, நித்தமும் காக்கட்டும்!

No comments:

Post a Comment