Monday, April 27, 2015

Periyava : Poem : "Marai thedum malarppatham"

மறைதேடும்மலர்ப்பாதம் 




மறை தேடும் மலர்ப்பாதம்

குறை நீக்கும் திருநாமம்

இறையே நீ எனச்சொல்லி,

பறைசாற்றும் சுடர் தேகம்



கரை அற்ற புனல் ஒன்றை

பிறையோடு அணிசூடும்

நிறை கொண்ட சிவன்ரூபம்

தரைவந்த நம்யோகம்!



பெருவாழ்வு தரும் ஹஸ்தம்

அரும் தவமே திருக்கோலம்

குறுநகையில் மனம் அழியும்

உறு வினையும் அழுதழியும்




ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!

No comments:

Post a Comment