Saturday, April 25, 2015

Periyava : Unnai charanamenru adainthen : Raaam : Subabanthuvaraali

Written on 31.3.15

ராகம் : சுபபந்துவராளி

உன்னைச் சரணமென்று நம்பி வந்தேன் ஐயா
உன்னைச் சரணமென்று நம்பி வந்தேன்
என்னை நீ பாராயோ? உன்பதம் சேராயோ? (உன்னை)

நீயே கதி என்று, உன் பாதம் துணை என்று
தீனன் உனை நம்பி வந்தேன் இன்று
தீனன் உனை நம்பி வந்தேன் (உன்னை)

பாவி இவன் என்று, பக்தன் இல்லை என்று,
நீயும் எனை வெறுத்தால், ஏற்கவும் நீ மறுத்தால்,
வேறெங்கு செல்வேன்? வேறென்ன செய்வேன்? (உன்னை)

தாயடித்தால் நானும் தந்தையிடம் செல்வேன்
தந்தையடித்தாலோ தாயிடம் செல்வேன்
தாயுமாய் தந்தையுமாய் இருப்பவன் நீதானே
நீயே எனையடித்தால், நானெங்கு செல்வேன்? யாரிடம் சொல்வேன்? (உன்னை)

No comments:

Post a Comment