Tuesday, May 5, 2015

Periyava : Anandhak kuththadum Natarajane : Chidambaram Nataraja Temple Kumbabishekam

Written on 30.04.2015

நாளை, 01-05-2015, வெள்ளிக்கிழமை அன்று, சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா. கடைசியாக, 1987 ஆம் வருஷம்தான் கும்பாபிஷேகம் நடந்தது. 28 வருஷங்களுக்கு அப்புறம், இப்போது நடக்க இருக்கிறது. 



ஆனந்தமே வடிவான அந்தக் கூத்தனின் கும்பாபிஷேகப் பெருவிழாவினை நேரிலே காண்பவர்கள், கொடுத்து வைத்தவர்கள்தான்! 

சகல தத்வங்களும் நிறைந்த வடிவான அந்த ஆனந்த நடராஜ மூர்த்தியை, ஒரு தத்துவமும் அறியாத நானும் துதிக்க அனுக்ரஹம் அளித்த அந்தப் பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு நமஸ்காரங்கள். 

அந்தத் தில்லை நடராஜ மூர்த்தி மேலே சிறியவன், அடியேனின் அர்ப்பணமாக, ஒரு பாமாலை :

("ஆடுகின்றானடி தில்லையிலே" மெட்டு)



ஆனந்தக் கூத்தாடும் நடராஜனே 
சச்சிதானந்தக் கூத்தாடும் நடராஜனே 
மன- கூத்தடங்கிட ஒரு வழிசொல்லிடேன் 
என்மன- கூத்தடங்கிட ஒரு வழிசொல்லிடேன் - நீ (ஆனந்த)

நீராட நெருப்பாட தானாடினாய் 
சடையாட இடையாட ஜதியடினாய் (ஆனந்த)

குழலாட புனலாட நடமாடினாய்
பெண்ணாட அதை விஞ்சி குழை சூடினாய் (ஆனந்த)

இரவாட பகலாட சதிராடினாய்
பிறையாட மறையாட இறையாடினாய் (ஆனந்த)

மானாட மழுவாட கோனாடினாய்
விண்ணாட மண்ணாட விளையாடினாய் (ஆனந்த)

உலகென்னும் மேடையில் நீயாடினாய்
உயிர்களை ஆட்டியே கூத்தாடினாய் (ஆனந்த)

நீயாட உலகங்கள் தானாடுமே!
உலகாளும் அரசாட, மனமாடுமே (ஆனந்த)
முயலகன் மீதாடும் நடராஜனே!
மயங்குமென் மனம்மீதும் ஆடாய் நீயே (ஆனந்த)

No comments:

Post a Comment