Wednesday, May 6, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali : 15

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"அமந்தானந்த க்ருன்மந்த கமனாய நமோ நம" (15)

"மெல்லிய நடையால் அளவில்லா ஆனந்தம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (15)

"Obeisance to Him who, though with a bounded gait, gives us unbounded Ananda" (15)



பேறாயிரம் கொடுக்கும் கேளாமல்தான் கொடுக்கும்
நூறாயிரம் ஜன்மம் செய்தவத்தால் கிடைக்கும்
வாராமல் வந்துதித்த மாமுனியின் பதமலரை
சீரான நடை அழகை வணங்கினோம் போற்றி போற்றி
(15)


இந்த நாமாவில் எனக்குச் சற்றே சந்தேகம் இருக்கிறது. பெரியவா நடை, மிக வேகமான நடை. மெதுவான நடை இல்லை. 'மந்த கமனம்' என்பது, சாதாரணமாக, 'மெதுவாக' நடப்பதைத்தானே குறிக்கும்? இங்கே, நாமாவின் தமிழாக்கம், 'மெல்லிய நடையால்' என்று இருக்கிறது. 'மெல்லிய நடை' என்று, சாதாரணமாகச் சொல்வது இல்லை. 'அதிராத நடை' என்பதை, இங்கே, 'மெல்லிய நடை' என்று குறிக்கிறார்களா?

ஆங்கில மொழிபெயர்ப்பு, 'அளவான நடை ஆனால், அளவில்லாத அருள்' என்பது போல் தொனிக்கிறது...

தெரிந்தவர்கள் யாரேனும், விளக்கமாகச் சொல்லுங்களேன்!!

No comments:

Post a Comment