Tuesday, May 5, 2015

Periyava : Periyava Ashtoththra Sadha Namavali Stotram : 14

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

“காந்திநிர்ஜித சூர்யேந்து கம்பராய நமோ நம” (14)

“சூரியனையும் சந்திரனையும் தன் காந்தியால் வெல்லக் கூடிய அழகிய தேஜசுடையவருக்கு நமஸ்காரம்” (14)

“Obeisance to Him whose beautiful tejas (lustre) dulls the shine of the sun and the moon” (14)


சுடர்மேனியின் திகழ்ஜோதியில் கதிரோனொளி மறைய
இடர்தீர்த்திடும் முகஜோதியில் நிறைமாமதி நாண
தொடர்மாயையும் கரஜோதியின் ஒருஆசியில் அழிய
அடர்வல்வினை பதஜோதியின் ஒருகாட்சியில் அறுமே (14)

இந்த நாமாவளிக்கன பாடல் எழுத ஆரம்பிக்கும்போது, கம்பராமாயணக் காட்சிதான் கண்முன் விரிந்தது. ராமன், ஸீதையோடும், இளைய பெருமாளோடும் கானகம் நடக்கிறான். அவன் மேனிப் ப்ரகாசத்தில், சூரியனின் ப்ரகாசம்கூட மறைந்து போகிறது என்று கம்பன் எழுதும் அந்தக் காட்சி தான் நினைவுக்கு வந்தது



"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய, 

'
பொய்யோ' எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ,

ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்"  (கம்பராமாயணம்)


அதே சந்ததில், இன்றைய நாமவளிக்கான பாடலும் அமைந்து போனது, பெரியவா அனுக்ரஹம்தான்

No comments:

Post a Comment