Saturday, June 6, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 46

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"சதா நவ நவா காங்க்ஷ்ய தர்ஷனாய நமோ நமஹ": (46)

"எப்போதும் புது விதமான கண் கொட்டாமல் பர்க்கத்தகுந்த தரிசனம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (46)

"Obeisance to Him who again and again gives new and new and much sought after visions of Himself" (46)

இந்த நாமா, எனக்கு மிகவும் பிடித்தமான நாமா. நாமாவளியில் இருக்கும் அத்தனை நாமாவுமே அற்புதமானவைதான் என்றாலும், இந்த நாமா கொஞ்சம் 'ஸ்பெஷல்' தான். பெரியவாள் எத்தனை எத்தனை விதத்தில் நமக்குத் தரிசனம் தந்திருக்கிறார்? அத்தனை விதங்களையும், அத்தனை வடிவங்களையும் இந்த நாமா நினைவுக்குக் கொண்டு வந்து விடுகிறது.

அதனால்தான், இரண்டு பாடல்களாய் இந்தத் திருநாமத்திற்கான பாடல் அமைந்துவிட்டது போலிருக்கிறது! இதுவுமே, போதும் என்று தோன்றவில்லை!!

குந்தியே அமரும் ஐயன், கால்மாற்றி நிற்கும் ஐயன்
எந்தையை நினைத்து இங்கே யோகத்தில் இருக்கும் ஐயன்
வந்தெமக்கருளி இன்பப் புன்னகை பூக்கும் ஐயன்
சுந்தரக் கோலம் என்றும் நவநவக் கோலம்தானே (46-1)


அருமைத் தாயாய்த் தந்தையாய்த் திகழ்வான்
வரும்குறை தீர்க்கும் தோழனாய் இருப்பான்
குருவாய் மிளிர்வான் இறையாய் ஒளிர்வான்
அருங்கதியருளும் அவ்வற்புதந்தானே! (46-2)

No comments:

Post a Comment