Friday, July 31, 2015

உன்னை சரணடைந்தேன் என் ஐயா

ராகம் : புன்னாகவராளி

உன்னை சரணடைந்தேன் என் ஐயா
உன்னை சரணடைந்தேன்

அன்பே, அமுதே, அருளே, இறையே,
என்றும் உன்பதம் கிடைத்திடவே இன்று (உன்னை)

காமமும் மோகமும் கோபமும் க்ரோதமும்
பாவி என்னை மிகப் படுத்துவதால் இன்று (உன்னை)

காசும் பணமும் ஒன்றே குறியாய்
காலமெல்லாம் வீண் அடித்துவிட்டேன் - இன்று (உன்னை)

பிறந்ததிலிருந்து உன் ஸ்மரணை இல்லாமல்
வயதினை வீணே கழித்துவிட்டேன் - இன்று (உன்னை)

இறப்பெனக்கென்று வரும் என அறியேன்
இருந்திடும் காலம் உனக்கெனவே - இன்று (உன்னை)

No comments:

Post a Comment