Sunday, July 26, 2015

Periyava : பெரியவா சரணம் என்றால் பிணியெலாம் போய்விடாதோ? : Saveri

ராகம் : சாவேரி
பல்லவி :
பெரியவா சரணம் என்றால் பிணியெலாம் போய்விடாதோ?
பெரியவா சரணம் என்றால் வினையெலாம் ஒய்ந்திடாதோ? (பெரியவா சரணம்)
அனுபல்லவி:
ஏழேழு ஜன்மம் செய்த புண்ணியம் உன்னைப் பெற்றோம்
ஏழேழ் பிறப்பும் உந்தன் சேவையே வரமாய்க் கேட்டோம் (பெரியவா சரணம்)
சரணம்:
அன்பெனும் மந்திரம்தான் உரைத்தவன் நீயே அன்றோ?
அன்பே சிவமாய் இங்கு இருந்ததும் நீயே அன்றோ?
அன்பெனும் பிடிக்குள் வந்த மாமலை நீயே அன்றோ?
அன்பர்கள் அபயம் என்றால் காப்பதும் முறையே அன்றோ? (பெரியவா சரணம்)

No comments:

Post a Comment