Sunday, July 26, 2015

Periyava : அத்தனைக்கும் உன்னிடமே

Periyava : அத்தனைக்கும் உன்னிடமே

மனதிலே குறையென்றால்
சந்தேகம் ஒன்றென்றால்
ஸன்னதிக்கு வந்திடுவோம்
கண்ணசைவில் பதில் பெறுவோம்
பிள்ளைக்குக் கல்யாணம்
பெண்ணுக்குச் சீமந்தம்
எம் இல்ல நிகழ்வுகளில்
அத்தனைக்கும் நீ வேண்டும்
வாழைமரம் காய்க்கவில்லை
வேப்பமரம் வளரவில்லை
சின்ன சின்ன ப்ரச்சினைக்கும்
எங்களுக்கு நீ வேண்டும்
அண்ணனுடன் ஆகவில்லை
தம்பியுடன் சுமுகமில்லை
உறவுகளின் சண்டைக்கும்
உன்னிடமே பதில் வேண்டும்
அத்தனைக்கும் உன்னிடமே
வந்திங்கே வாழ்வுற்றோம்
இன்றெங்கு சென்றிடுவோம்?
எம்குறையை முறையிடுவோம்?
பக்தர்கள் என்றாலோ
கனவிலும் நீ வந்திடுவாய்
படத்தில் இருந்தேயும்
புன்னகையால் பதில் கொடுப்பாய்
என் பக்தி போதாதே.
நான் எங்கு சென்றிடுவேன்?
எவ்வாறு உனை பார்ப்பேன்?
எப்படி உன் பதில் கேட்பேன்?
அழுதால் உனைப்பெறலாம்
ஆனாலும் எனக்குத்தான்,
அழக்கூடத் தெரியவில்லை
நானென்ன செய்திடுவேன்?
இத்தனை பக்தரிங்கே
யாரெனும் சொல்லுடுவீர்.
ஐயனைப் பார்த்திடவே
வழியொன்று உரைத்திடுவீர்.
வழியொன்று உரைத்திடுவீர்.

No comments:

Post a Comment