Friday, July 31, 2015

திருவடி சரணம் என அடைந்தேன்

ராகம் : ஷண்முகப்ரியா

திருவடி சரணம் என அடைந்தேன் - உன்
திருவடி சரணம் என அடைந்தேன் - குருமுர்த்தே உன்
திருவடி சரணம் என அடைந்தேன் (திருவடி)

அபயம் என்றோர்க்கு அருளும் திருவடி
எமபயம் நீக்கி காக்கும் திருவடி (திருவடி)

தில்லை அம்பலத்தில் ஆடிய திருவடி
காலனைக் காலால் உதைதத திருவடி
பிட்டுக்கு மண் சுமந்து நடந்த திருவடி
நண்பனுக்காக தூது நடந்த திருவடி (திருவடி)

மூவுலகும் நின்று அளந்த திருவடி
அகலிகை சாபம் போக்கிய திருவடி
கானகம் முழுதும் கடந்த திருவடி
பாண்டவர்க்கு தூது நடந்த திருவடி (திருவடி)

பதின்மூன்று வயதில் பயணித்த திருவடி
மும்முறை பாரதம் வலம்வந்த திருவடி
நடந்தே எங்கும் சென்றிட்ட திருவடி
பக்தர்கள் வாட்டத்தை போக்கிடும் திருவடி (திருவடி)

No comments:

Post a Comment