Sunday, July 26, 2015

Periyava : Periyavalum Sri Ramachandranum

March 28th 2015

Today, listened to Sri.Ganesa Sarma mama's upanyasam on Periyava. Today is Sri Rama Navami. So, Mama combined Rama Navami with Periyava avatharak Kandam. Wonderful. Blessed to listen about periyava and how periyava is none but SriRama Himself.
A small tribute :
தருமம் ஓர் பிறப்பெடுத்து ராமனாய் நடந்ததுண்டு
தருமமே மீண்டும் வந்து நம்மிடை நடந்ததின்று!
தருமமாம் ராமன் இன்று, வில்லும் அம்பும் விடுத்து,
ஆருயிர் சீதை இன்றி, அரச வாழ்வேதுமின்றி
காமனை எரித்த அந்த சங்கரன் ரூபம் கொண்டு
காமனை உயிர்த்த அந்த காஞ்சிமா நகரம் வாழும்
காமாக்ஷித் தாயாய் வந்து அன்பினை ஊட்டி நின்று
காமகோடி பீடம் ஏறி உலகெலாம் உய்ய நின்றான்
ராமனாய் வந்தபோது முனிவர்கள் மகிழ்ந்து நின்றார்
சம்புவாய் வந்தபோதோ முனியெலாம் வணங்கி நின்றார்
ராமனாய் வந்த நாளில் ராவணன் மாண்டு போனான்
சங்கரன் உதித்த நாளில் கலியுமே வீழ்ந்து போனான்
ஸ்ரீராமன் சொன்ன வார்த்தை என்றுமே தப்பிடாது
ஸ்ரீசரணர் சொன்ன வார்த்தை என்றுமே பொய்த்திடாது
ஓரே ஒரு பெண்ணை மட்டும் ஸ்ரீராமன் நினைத்திருந்தான்
ஸ்ரீசரணருக்கோ அந்த பெண்ணுமே தாயாய் வந்தாள்
தனக்கு ஒர் உதவி செய்த யாரையும் மறவான் ராமன்
உதவிதான் செய்ய வந்தோர் எவரையும் மறவார் சம்பு
அணிலுக்கும் ஸ்பரிசம் தந்து உயர்த்தினான் அந்த ராமன்
புரந்தரன் வில்வம் தந்தான். மோக்ஷமே தந்தார் சம்பு
ராமனாய் வந்த தர்மம் சம்புவாய் வந்த காதை
கணேச சர்மா மாமா சொல்லிடக் கேட்டு வந்தோம்
ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி பிறந்த அத்தினமாம் இன்று
பெரியவா பிறந்த கதையும் கேட்டுமே உருகி நின்றோம்
பெரியவாளுக்கும், அந்தப் பெரியவா கதையையும், ஸ்ரீராமன் காதையையும் சேர்த்துச் சொன்ன கணேச சர்மா மாமாவிற்கும், அனந்த கோடி நமஸ்காரங்கள்!

No comments:

Post a Comment