Sunday, July 26, 2015

Periyava : உனைக் காண வந்தேன் : Raagam : Kanada

Written on April 5th 2015
Today, came back from Chennai trip to Bangalore via Kanchipuram. ரொம்ப அற்புதமான தரிசனம். பெரியவ சன்னதி, காமாக்ஷி ரெண்டு தரிசனமும் ரொம்பவும் மனசுக்கு நிறைவாக இருந்தது. பேசும் தெய்வமாக இல்லையென்றாலும், பேசா தெய்வமாக பெரியவா இருக்கா. 'வா, எப்ப வந்தே' என்று பக்தர்களைக் குளிரக் குளிரக் கேட்கும் குரல் இல்லைஎன்றாலும், 'உனக்கு என்ன வேணும்' என்று கேட்டு அருள் செய்யும் அந்த தெய்வம் கேட்காமலே கொடுப்பதையும் உணர முடிகிறது. பெரியவா சரணம்.
பெரியவாளுக்கு இந்தப் பாடல் அர்ப்பணம்.
ராகம் : கானடா
பல்லவி
உனைக் காண வந்தேன் - இங்கு
உனைக் காண வந்தேன்
காஞ்சி மா நகர் தனில்
உன்னிடம் தேடி - இங்கு (உனைக் காண)
அனுபல்லவி (துரிதம்)
பேசிச் சிரித்து அருள் செய்திடும்
மூர்த்தியைக் காணேன் இங்கு காணேன்
மோனமாக முகமலர்ந்தருள் புரிந்திடும்
ஸிலாமூர்த்தியைக் கண்டேன் - இங்கே (உனைக் காண)
சரணம் (துரிதம்)
"வா"என்றழைத்து வாட்டம் போக்கிடும்
வார்த்தை ஒன்று நீ சொல்லிடக் காணேன்
வார்த்தை ஏதுமின்றி சன்னிதானமதில்
வருத்தமத்தனையும் தீர்ந்திடக் கண்டேன் (உனைக் காண)
என்ன வேண்டுமென்று கேட்டு நீ அழைத்து
வேண்டும் வரம் ஒன்றும் தந்திடக் காணேன்
வேண்டும் இது என்று கேட்டிடும் முன்னமே
தந்துவிடும் உன் குறு நகை கண்டேன் (உனை காண)

No comments:

Post a Comment