Sunday, July 26, 2015

Periyava : உறவென உருகி நின்றேன்

குருவெனப் பணிந்து நிற்பார் - ஜகத்
குருவெனப் பணிந்து நிற்பார்- காஞ்சி ஜகத்
குருவெனப் பணிந்து நிற்பார்.
முனியென நினைத்து நிற்பார் - சீலமிகு
முனியென நினைத்து நிற்பார் - தவ சீலமிகு
முனியென நினைத்து நிற்பார்.
இறையென இறைஞ்சி நிற்பார் - சங்கர
இறையென இறைஞ்சி நிற்பார் - சம்போ சங்கர
இறையென இறைஞ்சி நிற்பார்.
நானோ,
உறவென உருகி நின்றேன்- 'தாத்தா' என்ற
உறவென உருகி நின்றேன்- 'உம்மாச்சித் தாத்தா' என்ற என்
உறவென உருகி நின்றேன்
வயதில் மூத்த ஓர் - நண்பனாய்க்
கருதி நின்றேன் - ஆருயிர் நண்பனாய்க்
கருதி நின்றேன்
என்மனக் குறையையெல்லாம் உன்னிடம் சொல்லி நின்றேன்
பிடித்த சங்கீதமெல்லாம் உன்னிடம் பாடி நின்றேன்.
சுவைத்த நற்றமிழையெல்லாம் உன்னிடம் கூறி வந்தேன்.
குருவை, முனியை, இறையை இங்கே
உறவாய் உயிராய் நினைத்தல் சரியோ?
அறியேன் நானும், சிறியேன் ஐயா!
குருவே - முனியே - இறையே - எனினும்,
உறவாய், ஆருயிர்க்குயிராய் இங்கு
வருவாய், வந்து அருள்வாய் ஐயா!

No comments:

Post a Comment