Friday, July 31, 2015

தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும்

ராகம் : ஹமீர் கல்யாணி


தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும் - அந்த
தெய்வத்தின் குரல் கேட்க மனம் கனியும் - எங்கள் மனம் கனியும்

தெய்வத்தின் முகம் பார்க்க மனம் துடிக்கும் - அந்த
தெய்வம் நம் முகம் பார்க்க மனம் உருகும் -எங்கள்
மனம் உருகும்

தெய்வத்தின் தாள் பணிய உடல் சிலிர்க்கும் - அந்த
தெய்வத்தின் தாள் பணிய பிணி அகலும் - பிறவி
பிணி அகலும்

தெய்வத்தை நாம் நினைக்க பயம் அகலும் - அந்த
தெய்வம் நம்மை நினைக்க வளம் பெருகும் வாழ்வில் வளம் பெருகும்

No comments:

Post a Comment